வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இரத்தினபுரி, நிவித்திகல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரி, நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார். 

குறித்த சந்தேக நபரிடமிருந்து 600 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக நிவித்திகல  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)