இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 38 ஆவது போட்டியில் நெதர்லாந்து அணியை இலங்கை அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இளநகை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை பதிவுசெய்தது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்கா
46 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களையும் பதிவுசெய்தனர்.

பந்து வீச்சில் நெதர்லாந்து அணி சார்பில் லோகன் வான் பீக் (Logan van Beek) தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 118 ஓட்டங்களை பதிவு செய்தது.

நெதர்லாந்து அணி சார்பில் மைக்கேல் லெவிட் (Michael Levitt) 31 ஓட்டங்களையும் ஸ்காட் எட்வர்ட்ஸ் (Scott Edwards)
31 ஓட்டங்களையும் மேக்ஸ் ஓ’டவுட் (Max O’Dowd) 11 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் நுவன் துஷாரா 03 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )