வழமைக்குத் திரும்பிய மலையக ரயில் சேவை

வழமைக்குத் திரும்பிய மலையக ரயில் சேவை

மலையக ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (15) வட்டகொடை பாலத்தில் வைத்து டிக்கிரி மெனிக்கே ரயில் தடம் புரண்டது. இதன் காரணமாக மலையக ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

நேற்று (16) பிற்பகல் தொடருந்தை வழித்தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கொழும்பு கோட்டை முதல் பதுளை வரையான அஞ்சல் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் இன்று (17)அதிகாலை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )