சுதந்திரம் கோருபவர்களுக்கு மரண தண்டனை

சுதந்திரம் கோருபவர்களுக்கு மரண தண்டனை

தைவான் சுதந்திரம் குறித்து தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ‘ஜின்ஹுவா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,  “சீனாவிடமிருந்து தைவானுக்கு சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என்று தீவிரமாக செயல்படுவோருக்கு பிரிவினைவாதச் சட்டத்தின்கீழ் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளது.

இது தொடா்பாக நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தைவானுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட பிரிவினைவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுதந்திரம் கோரும் அமைப்புகளின் தலைவா்களுக்கு அந்தத் தண்டனை விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி சுன் பிங் கூறுகையில், “பிரிவினைவாதக் குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனை மரணம். இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை என்ற கூரிய வாளை உயா்த்திப் பிடித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 1949-ஆம் ஆண்டில் முடிந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் பிரதேசம் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. தைவானும் தன்னை தனி நாடாக இதுவரை பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை.

தைவானை எப்போது வேண்டுமானாலும் தங்களுடன் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளதாக சீனா கூறிவருகிறது. தேவைப்பாட்டால் இராணுவ வலிமையைக் கூட இதற்காகப் பயன்படுத்தலாம் என்று சீனா கூறுகிறது.

இந்தச் சூழலில், தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தலைவா்களோ உயரதிகாரிகளோ வந்தால் அதற்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்துவருகிறது. தனது எதிா்ப்பைத் தெரிவிப்பதற்காக தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகையை நடத்திவருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )