“கட்சியில்  நீண்டகாலம் அங்கம் வகிக்கும் ஒருவரை வேட்பாளராக களமிறக்க வேண்டும்’’

“கட்சியில்  நீண்டகாலம் அங்கம் வகிக்கும் ஒருவரை வேட்பாளராக களமிறக்க வேண்டும்’’

‘‘நாட்டில் இடம்பெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நீண்டகாலம் அங்கம் வகிக்கும், கட்சியைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக களமிறக்க வேண்டும்’’ என்று அந்தக் கட்சியின் உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கட்சியின் அகில இலங்கை செயற்குழு மற்றும் அரசியல் சபைக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (24) விஜயராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.  இதன்போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டத்தின் பின்னர் கருத்துரைத்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன, இன்னும் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் அவர், உரிய நேரத்தில் வேட்பாளர் தொடர்பான தீர்மானத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெளியிடும் என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )