இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற அதிகாரி உயிரிழப்பு

இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற அதிகாரி உயிரிழப்பு

இந்திய மீனவர்களைக் கைதுசெய்யச் சென்ற கடற்படை அதிகாரி ஒருவர் கடலில் விழுந்து காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களைக் கைதுசெய்யச் சென்றவேளையில் குறித்த கடற்படை வீரர் படகிலிருந்து தவறி விழுந்துள்ளார். 

சீரற்ற வானிலை காரணமாக கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டதாகவும் அதன்போது படகில் தடுமாறி அவர் விழுந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )