சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட
ரூ.2220,000 பெறுமதியான சிகரெட்டுகளுடன், அநுராதபுரம்-மடத்துகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று(27) கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் பல வருடங்களாக வாடகை வண்டி சாரதியாகக் கடமையாற்றிய சந்தேகநபர், நேற்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். ‘பிளாட்டினம்’ ரக சிகரெட்டுகள் 14,800 அடங்கிய 74 சிகரெட் அட்டைப் பெட்டிகள் அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கைதானவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(30)
சந்தேகநபருடன் மீட்கப்பட்ட சிகரெட் தொகையை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )