கண்டி எசல பெரஹரா : இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பஸ் சேவை

கண்டி எசல பெரஹரா : இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பஸ் சேவை

கண்டி எசல பெரஹரா திருவிழாவை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கண்டி மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் இந்த பஸ் சேவை பகல் மற்றும் இரவு சேவையாக இயங்கி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டம் முழுவதும் 438 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடுகளை செய்துள்ளதுடன் அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், கேகாலை, கொழும்பு, கம்பஹா, நாவலப்பிட்டி, கம்பளை போன்ற இடங்களிலிருந்து 100 மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )