கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்றைய தினம் (26) சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இதன் ஒரு கட்டமாக கொழும்பில் இன்று (26) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் அத்துடன் அதிபர், ஆசிரியர் சேவையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 இதேவேளை இன்றைய தினம் முன்னெடுக்கவுள்ள சுகவீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )