டீசல் திருட்டு ; 04 கொள்கலன் மீட்பு

டீசல் திருட்டு ; 04 கொள்கலன் மீட்பு

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் புகையிரதத்தில் தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 09 ஆம் திகதி இரவு காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் தரித்து நின்ற ரயில்களை , அதிகாரிகளால் கண்காணித்த போது ,திருட்டு கும்பல் ஒன்று ரயில் இயந்திரத்தில் இருந்து டீசல் திருடிக்கொண்டிருப்பதை கண்ணுற்று அவர்களை பிடிக்க முற்பட்ட போது அவர்கள் தப்பி சென்றுள்ளனர். 

இதன் போது அவர்கள் கொண்டு வந்திருந்த 20 லீட்டர் கொள்வனவு உடைய 04 கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்ட நிலையில் அதை கைவிட்டு தப்பி சென்றிருந்தனர். 

அவற்றை மீட்ட அதிகாரிகள் , சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில்  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )