துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

நிவிதிகல பதகட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது. திக்கோவிட்ட தோட்டத்தில், பாதகட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு  படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தனது மருமகனுடன் வீட்டு முற்றத்தில் அமர்திருந்தபோது, முகத்தை மறைத்து வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரரொருவர்; துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த நபரின் காலில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் நிவித்திகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )