கென்யா பாராளுமன்றுக்கு தீ வைப்பு

கென்யா பாராளுமன்றுக்கு தீ வைப்பு

கென்யா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் பாராளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து கோபமுற்ற போராட்டக்காரர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )