இங்கிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா ?இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று!

இங்கிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா ?இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது.

இன்று இரவு 8.00 மணிக்கு பிராவிடன்ஸ் மைதானத்தில் (Providence Stadium) குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரு சமபலம் வாய்ந்த அணிகள் அரையிறுதி போட்டியில் மோதுவதால் ரசிகர்கள் போட்டியை காண ஆவலுடன் உள்ளனர்

இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆரம்பம் முதல் தோல்வி அடையாமல் ஆதிக்கம் செலுத்தி இந்தியா அணி அரையிறுதி வரை தகுதி பெற்றுள்ளது.

அதே போல இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா உடனான போட்டியில் தோல்வி அடைந்தது. அதன் பிறகு அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மேலும், இந்த அரையிறுதி போட்டி நடைபெறும் கயானாவில் இன்று மழை பெய்ய 70 சதவிதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், போட்டி நடத்தப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போட்டி ரத்தாகும் பட்சத்தில் இந்தியா புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்தியா அணியை தோற்கடித்த இங்கிலாந்து அணி இறுதி போட்டி வரை சென்று கிண்ணத்தை கைப்பற்றியது.

அதற்கு இன்று இந்தியா பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடைசி சில ஆண்டுகளாக இந்தியா, ஐசிசி தொடர்களில் நாக்வுட் போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறும் நிலையில், இன்று இங்கிலாந்தை வென்று அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்பில்
ரசிகர்கள் உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )