மஹரகமவில் கத்திக்குத்து !

மஹரகமவில் கத்திக்குத்து !

மஹரகமவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவரை கொலை செய்ய முயன்றவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மஹரகம பொதுச்சந்தைக்கு முன்பாக உள்ள நடைபாதையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நபர் ஒருவர் மற்றுமொருவரை கத்தியால் குத்தியதையடுத்து, உடனடியாக செயற்பட்ட விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினர், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து சில போதை மாத்திரைகள் மற்றும் கூரிய ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்து இலக்கான நபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )