ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா !

ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா !

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்தாா்.

டி 20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்ற நிலையில், இந்திய அணி தலைவர் ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா், ஓய்வு பெறுவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்த நிலையில், தற்போது ஜடேஜாவும் அறிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவேன் எனவும் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

தனது ஓய்வு குறித்த பதிவில்,

‘மனம் முழுவதும் நன்றியுடன், சா்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். நாட்டுக்காக எப்போதுமே எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். இனிவரும் காலங்களில் இதர ஃபாா்மட்டுகளிலும் அத்தகைய பங்களிப்பை வழங்குவேன்.

டி20 உலகக் கிண்ணத்தை வெல்வதென்பது, எனது டி20 கேரியரின் உச்சபட்ச கனவாகும். அது நிஜமாகியிருக்கிறது. இந்த நினைவுகளுக்காகவும், ஆதரவுக்காகவும் நன்றி. ஜெய்ஹிந்த்’ என்று ஜடேஜா கூறியுள்ளாா்.

முன்னதாக இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )