சம்பந்தனின் மறைவுக்கு மஹிந்த இரங்கல் !

சம்பந்தனின் மறைவுக்கு மஹிந்த இரங்கல் !

மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான இரா.சம்பந்தனுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது இரங்கல் செய்தியில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

அவர் ஒரு பழைய நண்பர் மற்றும் சக ஊழியர்.

நாங்கள் பல நாட்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.

அவரது மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதலை கூற விரும்புகிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )