சம்பந்தனின் மறைவுக்கு ஜெய்சங்கர் இரங்கல்

சம்பந்தனின் மறைவுக்கு ஜெய்சங்கர் இரங்கல்

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“இலங்கைத் தமிழர் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன். பல தசாப்தங்களாக அவருடனான எனது பல சந்திப்புகள் மற்றும் உரையாடல்களை நினைவுபடுத்துகிறேன். இலங்கையில் தமிழர்களுக்கான சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதிக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள் ” எனத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )