பேருந்து ஒன்று லொறியுடன் மோதி  விபத்து ; 25 பேர் படுகாயம்

பேருந்து ஒன்று லொறியுடன் மோதி  விபத்து ; 25 பேர் படுகாயம்

சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்ப, கலஹிடியாவ பிரதேசத்தில் அரச பேருந்து ஒன்றும் சீமெந்து ஏற்றப்பட்ட லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேவாலய சந்தியில் இருந்து சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த அரசு பேருந்து ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )