இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு இரு குழந்தைகளுடன் அகதியாக சென்ற பெண் !

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு இரு குழந்தைகளுடன் அகதியாக சென்ற பெண் !

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்ற தாய் மற்றும் அவரது
02 குழந்தைகள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோகவள்ளி (34) அவரது குழந்தைகள் அனுஜா (08) மிஷால் (05) ஆகிய மூவர் தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடற்பகுதிக்கு சென்றுள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் யோகாவள்ளி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதி முகாமில் பிறந்தவர் என்றும் 15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சென்று அங்கு திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் , இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் அவர் தமிழகம் வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

விசாரணைக்குப் பின்னர் மூவரையும் மெரைன் பொலிஸார் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )