பதுளையில் இ.போ.ச பஸ் விபத்து : ஐந்து பேர் காயம்

பதுளையில் இ.போ.ச பஸ் விபத்து : ஐந்து பேர் காயம்

பதுளை, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்பே பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

பெத்தேவெலவிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )