பூஸா சிறையிலிருந்து 5 தொலைபேசிகள் மீட்பு !

பூஸா சிறையிலிருந்து 5 தொலைபேசிகள் மீட்பு !

பூஸா சிறைச்சாலையில் இன்று காலை வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் விசேட பிரிவின் 05 அறைகளில் ஐந்து கைத்தொலைபேசிகள், சார்ஜர்கள், டேட்டா கேபிள்கள் மற்றும் சிம் அட்டை ஒன்று என்பன கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையின் தந்திரோபாயப் படை, சிறைச் செயற்பாடுகள் மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் எழுபது அதிகாரிகள் கொண்ட குழு 46 சிறைச்சாலைகளில் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் கடுமையான குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளில் இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )