எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமைப் பத்திரங்கள்  !

எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமைப் பத்திரங்கள் !

கொழும்பு மாவட்டத்தில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்கும் ஆரம்பக்கட்ட நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான மிஹிந்து செத்புர, சிரிசர உயன மற்றும் மெட்ரோ வீட்டுத் தொகுதிகளின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் சுமார் 1,500 பேருக்கும் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )