தொடரை கைப்பற்றியது இந்திய அணி !

தொடரை கைப்பற்றியது இந்திய அணி !

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் சஞ்சு சாம்சன் 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த நிலையில் 168 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )