வைத்தியர் அர்ச்சுனா மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சென்றதால் பரபரப்பு : ஒருவர் கைது

வைத்தியர் அர்ச்சுனா மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சென்றதால் பரபரப்பு : ஒருவர் கைது

விடுமுறையில் சென்ற வைத்தியர் அர்ச்சுனா, விடுமுறை முடிய மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்து பதில் அத்தியட்சகருக்கு உரிய ஆசனத்திலும் அமர்ந்துள்ளார்.

இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்படுவதால், பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பதில் அத்தியட்சகராக அமைச்சு அனுமதியுடன் வடக்கு திணைக்களம் நியமித்திருக்கிற போதிலும் வைத்தியர் அர்ச்சனாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட எந்த ஒரு கடிதமும் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலையில் அத்துமீறி காணொளி எடுக்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )