காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் இதய சிகிச்சை பட்டியல் 2028வரை நீள்வு !

காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் இதய சிகிச்சை பட்டியல் 2028வரை நீள்வு !

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சை மற்றும் தொராசி சத்திரசிகிச்சை பிரிவில் இருதய சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களின் வரிசை 2028 வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரிவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரிவில் புதிதாக பதிவு செய்யப்பட்ட இதய நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சைசெய்ய 2028ஆம் ஆண்டு வரை காத்திருக்கவேண்டியுள்ளதாக
இதய நோயாளிகள் தெரிவிக்கின்றன.

இங்கு பணிபுரியும் இதயம் மற்றும் தொராசி பிரிவுகளின் நிபுணத்துவம் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்களால் இதய அறுவைச் சிகிச்சைக்காக இந்த பிரிவில் பதிவு செய்யும் நோயாளிக்கு 2028ஆம் ஆண்டு திகதி கள் வழங்கப்படுவதாக இருதய
நோயாளிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் இதயம் மற்றும் மார்பு குழி
தொடர்பான சிறப்பு மருத்துவர் நாமல் கமகேயுடன் இணைந்து இதயம் மற்றும் தொராசி குழிகளில் நிபுணத்துவம் பெற்ற மூன்று சத்திர சிகிச்சை நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வைத்தியர் நாமல் கமகே ஒரு வாரத்துக்கு நான்கு இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்
கொள்கிறார்.

கடந்த 2023ஆம் ஆண்டு நாமல் கமகேயால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இதய
நோயாளிகளின் பட்டியல் சுமார் 1,500 ஆகும்.

எனினும், கடந்த ஆண்டில் வைத்தியர் நாமல் கமகேயால் சுமார் 400 இதய அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

இதயம் மற்றும் தொராசி குழிகளில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர் நாமல் கமகே, தான் ஓய்வு பெறும்போது சுமார் 4,000 இதய நோயாளிகளின் பட்டியல் தன்னிடம் இருந்ததாக கூறுகிறார்.

அந்த நோயாளிகள் உயிருடன் இருக்கிறார்களா? என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதயம் மற்றும் தொராசிகுழி சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற அறுவை சிகிச்சை
நிபுணரான வைத்தியர் ட்ரோ லுஷா ஹரிஷ்சந்திர இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

‘இதய அறுவைச் சிகிச்சைக்காக இதய நோயாளியை 2028 வரை காத்திருக்கச் சொல்வது நடைமுறைக்கு மாறானது.

இந்த காரணத்திற்காக, புதிதாக பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கான கூடுதல் பட்டியலை நாங்கள் வைத்துள்ளோம்.

நான் ஒரு நாளைக்கு 2 இதய அறுவைச் சிகிச்சை செய்கிறேன்.

ஒரு இருதய அறுவைச் சிகிச்சை நிபுணரிடம் 8 இளநிலை மருத்துவர்கள் இருக்க வேண்டும்.

வைத்தியர்கள் பற்றாக்குறையே இதைப் பெரிதும் பாதிக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை டாக்டர்கள் இடமாற்றம் என்பது வேறு விடயம்.

அவர்களுக்கு பயிற்சி அளிக்க சுமார் 2 ஆண்டுகள் ஆகும்.

இதய அறுவைச் சிகிச்சை உச்சத்தில் இருக்கும்போது அவை மாறுகின்றன. பயிற்சி
பெற்ற வைத்தியர்கள் இருந்தால், அதிக இதய அறுவைச் சிகிச்சை செய்யலாம்.
அது மட்டுமல்ல, இதய அறுவை சிகிச்சையின் தரமும் மிகவும் முக்கியமானது’ என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )