ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது

ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அரசாங்கமோ எந்தவித மறைமுக நடவடிக்கையையும் மேற்கொண்டதில்லை என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

எதிர்க்கட்சியே தேர்தலை பிற்போடுவதற்கான சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதனை மறைக்க ரணில் விக்ரமசிங்கவின் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

ஆனால் உரிய காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க உறுதியாக இருக்கிறார். கடந்த வாரம் தொழிலதிபர் ஒருவரால் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை கேள்விக்குட்படுத்தி, உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது

எனினும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. ஆனால் குறித்த வழக்கு தாக்கல் செய்த நபர், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஒருவரின் நெருங்கிய நண்பர்

இதன் மூலம் தேர்தலை பிற்போடுவதற்கு சதித்திட்டங்களை மேற்கொள்பவர்கள் யார் என்பதை புரிந்துகொள்ளலாம். அதனால் ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க உறுதியாக இருக்கிறார்.

அவர் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவார். அதேபோன்று பெரும்பான்மை வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவதை சஜித், அநுர யாராலும் தடுக்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )