விவகாரத்தை அறிவித்தார் ஹார்திக் பாண்டியா !

விவகாரத்தை அறிவித்தார் ஹார்திக் பாண்டியா !

மனைவியை பரஸ்பரமாக பிரிவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா நேற்றைய தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹார்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“4 வருடங்கள் ஒன்றாக இருந்த பிறகு, நடாஷாவும் நானும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் எங்களால் இயன்றதை ஒன்றாக முயற்சித்து எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தோம்.

இதுதான் எங்கள் இருவருக்கும் சிறந்தது என்று நாங்கள் நம்புகிறோம்.

நாங்கள் ஒன்றாக அனுபவித்த மகிழ்ச்சி, பரஸ்பர மரியாதை, நட்பு, நாங்கள் ஒரு குடும்பமாக இருந்ததால் இந்த முடிவு ஒரு கடினமான முடிவாகும்.

அகஸ்தியா எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார். அகஸ்தியாவை இருவரும் கவனித்துக் கொள்வோம்.

மேலும், அவருடைய மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் கிடைக்க நாங்கள் ஒத்துழைப்போம்.

இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு தனியுரிமை வழங்க உங்கள் ஆதரவையும் புரிதலையும் நாங்கள் உண்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

செர்பியா நாட்டைச் சேர்ந்த நட்டாசாவை இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யா கடந்த நான்கு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் கருத்த வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் இருவரும் அது குறித்து வெளிப்படையாக கருத்து ஏதும் கூறாமல் இருந்தனர்.

உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், ஹர்திக் பாண்ட்யா வெற்றி கொண்டாட்டத்தில் இருந்தபோது நட்டாசா தனது குழந்தையுடன் செர்பியா சென்றார்.

இதனால் வதந்தி ஏறக்குறைய உண்யைமானது.

இந்த நிலையில் பிரிந்து வாழ்வதற்கு இருவரும் பரஸ்பர முடிவு எடுத்துள்ளனர்.

இந்த தகவலை ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாஷா தமது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )