தொழிற்சங்க நடவடிக்கையில் அதிபர் – ஆசிரியர்கள்

தொழிற்சங்க நடவடிக்கையில் அதிபர் – ஆசிரியர்கள்

அதிபர் -ஆசிரியர்கள் இன்று (22) முதல் இரண்டு வாரங்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (22) முதல், எதிர்வரும் பதினைந்து நாட்களில் வகுப்பறைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாகவும், சகல வெளி நடவடிக்கைகளிலிருந்தும் விலகிக் கொள்வதாகவும் இலங்கை தேசிய அதிபர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசியல் இயக்கங்களை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிக்கவில்லையென ஆசிரியர் – அதிபர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )