கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி வெடிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி வெடிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரின் துப்பாக்கி வெடித்ததில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும் முனையத்தில் இன்று காலை கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி வெடித்ததில் முனையத்தின் கூரை சேதமடைந்துள்ளது.

மேலும், இதனால், உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடமையில் இருந்த விமானப்பட வீரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )