விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம் !

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம் !

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 6 மாதங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு நிதி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கில் 2001/931/CFSP பொது நிலைப்பாட்டின்படி அமைக்கப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று ( 26) புதுப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )