வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா!

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா!

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகக் கடமையாற்றிய சமிந்த அதுலுவாகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதன்படி அவர் தமது கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரின் தன்னிச்சையான தலையீடு மற்றும் தேவையற்ற செல்வாக்கு காரணமாகத் தாம் பதவி விலகுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த நான்கரை வருட சேவையில் வீதி அபிவிருத்தியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் தனது கடமைகளை செய்ததாக சமிந்த அதுலுவாகே தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )