சேலைக்காக கணவர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த மனைவி

சேலைக்காக கணவர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த மனைவி

பெண் ஒருவர் தனக்கு சேலை வாங்கி தராததால் கணவர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டு திருமணமான இந்த ஜோடி, சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் புதிதாக சேலை வாங்கி தரச்சொல்லி கணவனிடம் மனைவி வற்புறுத்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, கணவர் தனக்கு சேலை வாங்கிதரவில்லை என்றும், என்னை உடல் ரீதியாகவும் தாக்கியதாகவும் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதில் மனைவிக்கு புடவை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கணவனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. பின்னர் கணவன் புடவை வாங்கி கொடுத்த பின்னர் மனைவி சமாதானம் ஆனதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )