2வது நாளாக தொடரும் மீட்புப்பணி ; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ; 151 பேர் பலி

2வது நாளாக தொடரும் மீட்புப்பணி ; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ; 151 பேர் பலி

கடந்த சில வாரங்களாக கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

இதனால் அங்கு , நேற்று முன் தினம் (29) நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணிவரை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், இரவு, அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மக்கள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.

இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து நேற்று (30) காலை முதல் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், பல்வேறு மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

மீட்புப்பணியின் முதல்நாளான நேற்று (30) இரவு வரை 151 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 2வது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )