இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் நேற்று (04) மாலை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்புக்குள் ஒரு படகில் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நால்வரும் மீன்பிடிக்குப் பயன்படுத்திய படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )