“என்னால் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியும்“

“என்னால் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியும்“

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹரின் பெர்னாண்டோ,

“இன்று என்னால் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியும். நான் என்னை நம்பினேன். அந்த அவதானத்தை அறிந்துதான் முடிவு எடுத்தேன். நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க என்னால் முடிந்ததைச் செய்ய அந்த நேரத்தில் நான் சென்றேன். நானேதான்.. ஃபெயில் என்று சொன்னேன். நானேதான் அந்தக் கதைகளையெல்லாம் உருவாக்கினேன்.  நீதிமன்றத்திற்கு நான் எதுவும் சொல்ல மாட்டேன். அந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )