இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட மின்வெட்டு மீண்டும் ஏற்படாமல் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் கூற்றுப்படி, சில ஜெனரேட்டர்களை குறைந்த செயல்பாட்டில் வைத்திருத்தல், மின்சாரக் கட்டமைப்பை நிலைப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட எரிவாயுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை முக்கிய நடவடிக்கைகளில் அடங்குமென தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 09ஆம் திகதியன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து ஆய்வு நடத்திய பின்னர் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களை தடுக்க உடனடி மற்றும் நீண்டகால சரிசெய்தல் நடவடிக்கைகள் நடந்து வருவதாக மின்சார சபை பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)