கிளிநொச்சியில் துப்பாக்கி சூடு

peoplenews lka

கிளிநொச்சியில் துப்பாக்கி சூடு

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று(28.06) காலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர், கார் ஒன்றில் பயணித்த ஒரு குழுவினர் மீது துப்பாக்கி சூடு நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த 38 வயதான கார் ஓட்டுநர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் கனகபுரம் நோக்கி சென்ற போது காயமடைந்தவருக்கும், மேலும் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதற்கு பழி வாங்கும் நோக்கிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது .

தப்பி சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share on

உள்ளுர்

peoplenews lka

போலந்து இளம் பெண் மரணம்...

தங்காலை கடலில் நீச்சலில் ஈடுப்பட்ட இளம் பெண் மரணம்.. Read More

peoplenews lka

இரட்டை சிசுக்கள் களுபோவில வைத்தியசாலையில் மரணம்...

களுபோவில வைத்தியசாலையில் இறந்த இரட்டைக்குழந்தைகள் மருத்தவ கவலையீனம் காரணமாக இறந்ததாக குற்றச்சாட்டு.. Read More

peoplenews lka

பாதாள உலகக்குழு தலைவர் கைது...

நவீன ரக பிஸ்டலுடன் பாதாள குழு தலைவர் கைது.. Read More

peoplenews lka

குளவிக்கு தப்ப உயிரை மாய்துகொண்ட சிறுவன்...

குளவிக்கொட்டுக்கு தப்பிய ஓடிய சிறுவன் குன்றிலிருந்து வீழ்ந்து மரணம்.. Read More