கிளிநொச்சியில் துப்பாக்கி சூடு
கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று(28.06) காலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர், கார் ஒன்றில் பயணித்த ஒரு குழுவினர் மீது துப்பாக்கி சூடு நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த 38 வயதான கார் ஓட்டுநர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரில் கனகபுரம் நோக்கி சென்ற போது காயமடைந்தவருக்கும், மேலும் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதற்கு பழி வாங்கும் நோக்கிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது .
தப்பி சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.