குளவிக்கு தப்ப உயிரை மாய்துகொண்ட சிறுவன்
குளவிக்கொட்டிலிருத்து தப்பித்துக்கொள்வதற்காக ஓடிய 16 வயதுடைய சிறுவன் ஒருவன் குன்று ஒன்றிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளான். நுவரேலியாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா, பம்பரகலவத்தை பகுதியில் நால்வர் இவ்வாறு குளவிக்கொட்டுக்கு உள்ளன நிலையில், தப்பித்து ஓடியுள்ளனர். அதன் போதே சிறுவன் குன்றிலிருந்து காட்டுபகுதிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை கேள்வியுற்ற பொலிஸார் மற்றும் நுவரேலியா மாநகரசபை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்து சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.