முக்கியஸ்தர்களின் வீடு ஆடம்பர விடுதியாகிறது.
விசும்பாய எனப்படும் முக்கியஸ்தர்கள் பலர் வாழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாளிகை, விடுதியாக மாற்றப்படவுள்ளது. கொழும்பு 07 இல் அமைந்திருக்கும் இந்த பாரிய வசதிகளை கொண்ட மாளிகை 1835 ஆம் ஆண்டு ஆங்கிலேயரினால் கட்டப்பட்டது.
கொழும்பு வர்த்தக கம்பனியானால் அதன் பொது முகாமையாளரினால் பாவிக்கப்பட்ட இந்த மாளிகை 1973 ஆண்டு அரசுடமையாக்கப்பட்து. இந்த மாளிகையில் முன்னாள் பிரதமர்களான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கே, D.M ஜயரட்ன, முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்கே, அமைச்சர்கள் லக்ஷ்மன் கதிர்காமர், மங்கள சமரவீர, G.L பீரிஸ் போன்றவர்கள் தமது வாஸஸ்தலமாக இந்த மாளிகையை பாவித்துள்ளனர்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை 50 வருட ஒப்பந்தத்தில் அஷோட்டல்ஸ் ஹொஸ்பிடாலிட்டி லிமிட்டட் நிறுவனத்துக்கு குறித்த மாளிகையினை வழங்கியுள்ளது. அஷோட்டல்ஸ் நிறுவனம், ஹுனஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஜப்பானிய இணைவு கூட்டமைப்பு ஆகியன இணைந்து இந்த மாளிகையினை அதி நவீன வசதிகள் கொண்ட விடுதியாக( ) ஆக மாற்றவுள்ளன.