உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் ஆதரவை எனக்கு தாருங்கள்

உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் ஆதரவை எனக்கு தாருங்கள்

செப்டெம்பர் 21 ஆம் திகதி இந்த நாட்டின் அனைத்து மக்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான ஆணையை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழு நாட்டு மக்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் இன்று (15) வேட்புமனுவை கையளித்த பின்னர் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் , நாட்டில் புதிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )