ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரையில் மொத்தம் 566 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.

வார இறுதியின் 24 மணி நேரத்தில் 47 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி முதல் சனிக்கிழமை மாலை 4:30 மணி வரை பதிவை ஆகும்.

மொத்த முறைப்பாடுகளில், 39 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை.

மேலும், தேர்தல் தொடர்பில் 16 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.

(ஜெயராம்)

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )