திருவிழாவில் 35 பவுன் நகை அபகரிப்பு

திருவிழாவில் 35 பவுன் நகை அபகரிப்பு

யாழ். தொண்டமானாறு பகுதியில் அமைந்துள்ள செல்வ சந்நிதி முருகன் ஆலயத்தின் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற வருடாந்திர தேர்த் திருவிழாவின்போது, சுமார் 35 பவுன் நகை அபகரிக்கப்பட்டுள்ளது.

செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்திர தேர் திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்த் திருவிழாவை நேரில் கண்டு களித்துள்ளனர்.

இந் நிலையில், ஆலய சூழல்களில் சன நெரிசல்களைப் பயன்படுத்தி திருடர்கள் தன் கைவரிசையைக் காட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பல பக்தர்களின் பெறுமதியான தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 35 பவுன் நகைகள்
அபகரிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )