தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்காக 736,589 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றுள் 24, 268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 712,321 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு மேலதிக திகதியாக செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )