எதிர்க்கட்சியில் இணைந்தார் கருணாதாச கொடித்துவக்கு

எதிர்க்கட்சியில் இணைந்தார் கருணாதாச கொடித்துவக்கு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார்.

2020 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கருணாதாச மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 114,319 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )