சீரற்ற காலநிலையால் 3,432 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 3,432 பேர் பாதிப்பு


சீரற்ற காலநிலை காரணமாக 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி களுத்துறை, புத்தளம், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மழையுடன் வீசிய கடுங் காற்று காரணமாகக் குறித்த பகுதிகளில் உள்ள 76 வீடுகளுக்குப் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )