வெளிநாடுகளில் அநுரவுக்கு வழங்கப்பட்ட பணம் எங்கே ?

வெளிநாடுகளில் அநுரவுக்கு வழங்கப்பட்ட பணம் எங்கே ?

அநுரகுமார திஸநாயக்கவுக்கு வெளிநாடுகளில் பெற்றுக்கொடுக்கப்பட்ட பெருந்தொகைப் பணத்துக்கு என்ன வாயிற்று என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் பல்
வேறு நாடுகளுக்கு விஜயம் செய்தார்.

அங்கு அவருக்கு பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டது.

அந்தப் பணத்துக்கு என்ன வாயிற்று? நாட்டிலுள்ள ஏனைய கட்சிகளைவிட, தேசிய மக்கள் சக்தியின் வங்கி கணக்கில் பெருந்தொகை நிதி இருக்கின்றது.

மக்கள் இது குறித்து தெளிவு பெற வேண்டும். அரசியல்வாதிகள் அதிசொகுசு வாகனங்களில் பயணிப்பதாக அநுர குமார திசாநாயக்க குற்றம் சுமத்துகிறார்.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர், அவரும் அதிசொகுசு
வாகனத்திலேயே பயணிக்கிறார்.

நாட்டை முன்னேற்றும் செயற்றிட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடமே இருக்கிறது. தேர்தல் காலத்தில் கட்சி மாறுபவர்களைப்பற்றி எமக்கு கவலை இல்லை.

மக்கள் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கே உண்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )