பாதாள உலக கும்பலைச் சேர்ந்த  ஒருவர் கைது

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

பாதாள உலக கும்பலின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது அத்துருகிரிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய பாதாள உலக கும்பலைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பாதாள உலக கும்பலுடன் தொடர்புக்கொண்டதாக கூறப்படும் மேலும் 37 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 3,449 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரல் கூறப்பட்டுள்ளது.  

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )