நாட்டின் பொருளாதார அழிவுக்கு பிரதான காரணம் ஜே.வி.பி !

நாட்டின் பொருளாதார அழிவுக்கு பிரதான காரணம் ஜே.வி.பி !

சர்வதேசம் அங்கீகரித்த இனவாதமில்லாத ஆளுமைமிக்க தலைமைத்துவம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவாகும். அவ்வாறான ஒரு தலைவரை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வது நாட்டு மக்களின் கடமையாகுமென பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முசாரப் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இந்நாட்டில் அபாயகரமான ஒரு கட்சியாகவும், இயக்கமாகவும் ஜே.வி.பிகட்சி காணப்படுகின்றது. பல்கலைக்கழகம் தொடக்கம் அரச நிறுவனங்கள் வரை
தொழிற்சங்கங்கள் என்ற போர்வையில் அமைப்புகளை ஏற்படுத்தி போராட்டங்களைச் செய்து காலத்தை வீணடித்து பொருளாதாரத்தை வளர்ச்சியடையாமல் தடுக்கின்றனர்.

ராஜபக்ஷாக்கள் திருடர்கள் என்று கத்துகின்றனர். ராஜபக்ஷாக்களை 2005ம் ஆண்டு
ஆட்சிக்கு கொண்டுவர உழைத்தவர்கள் ஜே.வி்.பி.கட்சியினர்தான். மஹிந்த சிந்தனையை புகழ்ந்துபாராட்டி பேசியவர்கள், இன்றுராஜபக்‌ஷாக்கள் கள்வர்கள் என்று கத்துவது வேடிக்கையாக உள்ளது.

எனவேதான், சர்வதேசம் அறிந்த, இனவாதமில்லாத, இளைஞர்களை முன்னிலைப்படுத்தும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க நாம் எல்லோரும் தயாராக வேண்டும்.

அரசியல் அதிகாரம் இல்லாமல் எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இறக்காமத்திற்கு எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பேன். கடந்த காலத்தில் நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் எண்ணத்துடனயே
இருந்து கொண்டிருக்கின்றேன்.

இறக்காமத்தின் அபிவிருத்திக்காக எனக்குக் கிடைத்த வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டிலும், விசேட நிதி ஒதுக்கீட்டிலும் சுமார் 16 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கிவிட்டுத்தான் இந்த மேடையில் பேசிக்கொண்டிருக்கின்றேன்.

நமது அரசியல் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத அரசியல் கைக்கூலிகள்
முசாரப் வாக்குறுதியை மீறிவிட்டதாக அபாண்டமான பொய்யைச் சொல்லுகின்றனர்.
பொத்துவில் பள்ளிவாசலில் நான் செய்த சத்தியத்தைக் காப்பாற்றவே நான் இருக்கின்றேன்.

இலங்கையில் உள்ள எந்தப்பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகன பேர்மிட் இன்று
வரை வழங்கப்படவில்லை. அவ்வாறு கிடைக்கும்போது அதனை செய்யவே சித்தமாக உள்ளேன்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )