ஜெல் வடிவ தங்கத்துடன் ஒருவர் கைது

ஜெல் வடிவ தங்கத்துடன் ஒருவர் கைது

நான்கு கோடி ரூபாய் பெறுமதியான ஜெல் வடிவ தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 1,975 கிராம் நிறையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டுபாயிலிருந்து நாட்டுக்கு பிரவேசித்த 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் தமது காலணி மற்றும் உள்ளாடை என்பவற்றில் தங்கத்தை சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )