மக்களின் துன்பம் நீக்கி ரணில் பிறவிப் பயன் அடைந்துள்ளார் !

மக்களின் துன்பம் நீக்கி ரணில் பிறவிப் பயன் அடைந்துள்ளார் !

‘நாட்டு மக்கள் பட்ட கஷ்டங்களை நிவர்த்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறவிப் பயனை அடைந்துள்ளார்.’ என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர
அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடையாமல் இருக்கும் வகையில் ஜனாதி
பதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பி வருகிறார்.

பண்டாரநாயக்கவில் காலத்தில் ஒன்றுபட்டு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

அதேபோன்ற நிலைமை நாட்டில் மீண்டும் உருவாகியுள்ளது.

அதற்காக தேசிய வரவு-செலவுத் திட்டமும், பொருளாதார மாற்றத்துக்கான சட்டமூலமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளார்.

‘உறுமய’ திட்டத்தின் கீழ் மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கினார்.

இலவசமாக அரிசி வழங்கினார்.

அரச ஊழியர்களுக்கு மேலும் 25 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பை வழங்குவதாக கூறியுள்ளார்.

இவை எவையும் தேர்தல் வாக்குறுதிகள் அல்ல. எனவே நாட்டு மக்கள் பட்ட கஷ்டங்
களை நிவர்த்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிறவிப்பயனை அடைந்துள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )